Monday, February 14, 2005

அன்புத்தினம்

இன்றைய காலகட்டத்திலே அன்பர் நாள் என்பது நத்தார்க்கொண்டாட்டம்போல வெறுமனே வர்த்தக முக்கியம் வாய்ந்த நாள் மட்டுமே என்பது என் தனிப்பட்ட கருத்து; ஆனால், இன்றைய நாளிலே அறிந்த ஒரு செய்தி மெய்யாகவே இதை ஒரு குடும்பத்துக்கு அன்புத்தினமாக மாற்றியிருப்பதை இட்டு மிகுந்த மகிழ்ச்சி.
==========================================
பிபிஸி தமிழ்ச்சேவை
14 பிப்ரவரி, 2005 - பிரசுர நேரம் 17:12 கிறீன்விச் நிர்ணயநேரம்

சுனாமியால் அநாதரவான குழந்தையின் பெற்றோரை அடையாளம் காண்பதற்கான மரபணு சோதனையின் முடிவு வெளியானது

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் கல்முனையில் சுனாமியின் தாக்கத்தின் போது அநாதரவான குழந்தையின் பெற்றோர் யார் என்ற பிரச்சினைக்கு மரபணு சோதனை மூலம் தீர்வு கிடைத்துள்ளது.

முருகுப்பிள்ளை ஜெயராஜ் மற்றும் ஜுனிதா ஆகிய தம்பதியரின் குழந்தையே இதுவென்று மரபணு பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Friday, February 11, 2005

சுனாமி~மாமல்லபுரம்

தமிழோசை
11 பிப்ரவரி, 2005 - பிரசுர நேரம் 17:21 ஜிஎம்டி

சுனாமியை அடுத்து மாமல்லபுரத்தில் மேலும் சில சிற்பங்கள் கடலுக்கு வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன

தமிழ்நாட்டின் மாமல்லபுரம் பகுதியில் கடற்கரையோரமாக மணலினால் மூடப்பட்டிருந்த பல்லவர்காலக் குடைச்சிற்பங்கள் சில சுனாமி அலைகளின் தாக்கத்தின் பின்னர் மீண்டும் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன.

கடற்கரைக் கோயிலை அடுத்து காணப்படும் இந்த சிற்பங்கள், சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் கடலில் மண்ணினால் மூடப்பட்டு விட்டதாகவும், சுனாமி தாக்கத்துக்கு பின்னர் அவற்றை காணக்கூடியதாக இருப்பதாகவும் சென்னையை சேர்ந்த இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கண்காணிப்பாளர் டி. சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.